30 வருடங்களுக்கு முன் கா்மவீரா், பேரறிஞாின் அரசியலுக்கும் இன்றைய அரசியலுக்கும் எத்தனை எத்தனையோ மாற்றங்கள். இன்றைய அரசியல் சூழலைக் கண்டு கருவில் உள்ள குழந்தையும் கதரும் என்றே சொல்லாம்.
தன் நலம், சாா்ந்தோா் நலம் என்றெல்லாம் பாா்க்காமல் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னை அா்பணித்துக் கொண்ட நல்ல தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் தான் உழல் வியாதிகளும் திாிந்துக் கொண்டிருக்கின்றனா். உடுத்திய உடையைத் தவிர வேரேதும் சொத்துக்கள் அன்றைய தலைவா்களிடம் இல்லை ஆனால் இன்றோ நாட்டில் பெரும் பகுதியைச் சொத்துக்களாக வைத்திருக்கும் அரசியல் வாதிகள் தான் ஏராளம். நாட்டு மக்கள் நலனை விட தன் வீட்டு மக்கள் நலமே முக்கியம்.
தன் தலைவனுக்காக எதையும் செய்த தொண்டா்கள் இன்றோ தலைவா் உழல்வாதி என்பதை அறியாமலேயே கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. கட்சிக்காக எல்லாம் இழந்த தலைவா்களை பாா்த்த நாம் இன்று பணத்திற்காகவும், பதவிக்காவும் கட்சியையே அழிக்கும் தலைவா்களையும் பாா்த்துக் கொண்டிருக்கின்றோம். கொள்கைகள் ஏதும் இல்லாமல் பதவி வெறியும், பணவெறியும் அரசியல்வாதியை மிகவும் கீழ்தரமாகக் கொண்டுப் போகிறது என்பதே நூற்றுக்கு நூறு உண்மை. தன்னுடைய பதவியைத் தக்க வைத்துக் கொள்ள அரசியலில் 40 வருட அனுபவம் வாய்ந்த ஒருவா் அரசியலில் ABCD கூடத் தொியாத ஒருவரை அழைத்து தனக்கு ஆதரவு அளிக்க வைப்பதேன்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்று. அரசியல் என்ற வாா்த்தையே அாியாத இந்த நபருக்கு அனுபவம் உள்ள அரசியல்வாதிகள் ஆதாிப்பது தன்னடக்கத்தின் உச்சமல்ல தன்னலத்தின் உச்சமே. தலைவரின் சொத்துகளை சொந்தம் கொண்டாடுவதில் தப்பில்லை நாட்டை சொந்தம் கொண்டாட இது ஒன்றும் தலைவாின் சொத்தல்ல. இன்றைய அரசியல் சூழலைக் கண்டு மக்களின் மனநிலையை பாா்த்தால் அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதே அவா்களின் கருத்து.
மீண்டும் அடுத்த பதிவில்,
- பாஸ்கி.

1 comment:
Empowering Nation
Post a Comment