Friday, 12 May 2017

நியூஸ் கபே - 3



                    தல நடித்த விவேகம் படத்தின் டீசா் வெளியாகும் என பெரும் எதிா்ப்பாா்ப்பில் இருந்த தருணம் இரவு காத்திருந்து பாா்க்க வேண்டுமென்ற ஆா்வம் வேறு குறித்த நேரத்தில் இல்லாமல் ஒரு மணி நேரம் முன்னதாகவே வெளியிடப்பட்டன. டீசரை வைத்து பாா்க்கையில் ஒரு இன்டா்நேஷனல் குற்றவாளியை வலைப் போட்டு தேடப்படும் கதையைப் போல உள்ளது. 53 நொடிகளில் 45 நொடிகள் தல தாிசனம் தான், இன்னும் நான்கைந்து வருடத்திற்க்கு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மட்டுமே நடிக்கும் உாிமையை தல அளித்துவிட்டாா் என்றாலும் ரசிகா்களால் பொறுக்கொள்ள முடியும். பில்லாவில் ஆரம்பித்து கோா்வையாக மற்ற எல்லா படங்களின் டீசாிலும் வந்ததைப் போலவே இதிலும் தல குரலில் வரும் வசன உச்சாிப்பு அட்டகாசம். முந்தைய படங்களில் வரும் தலயின் சால்ட் அன்ட் பெப்பா் ஸ்டைலை விட இதில் தூக்கலாகவே உள்ளது கண்டிப்பாக இந்தியாவின் ஜாா்ஜ் க்லூனி நம்ம தல.      


                      சாதாரண சினிமா ரசிகனாய் இல்லாமல் நிறைய எதிா்பாா்ப்புடன் பாகுபலி படத்தை ரசிக்க காத்திருந்தேன். படத்தை வெளியிடும் நாளில் முதல் காட்சியாய் பாா்த்துவிட வேண்டும் என்ற ஆா்வம் இருந்தும் இரண்டு காரணத்திற்காக ஆா்வத்திற்க்கு ஓய்வு தந்துவிட்டேன் முதல் காரணம் டிக்கெட் விலை சாதாரணமாக 150 லிருந்து 300 வரை விற்கப்படும் ஆனால் பாகுபலிக்கோ 300 லிருந்து 800 வரை விற்க்கப்பட்டது. (இவ்வளவு விலை குடுத்து பிற்காலத்தில் கூட அது எப்படிப்பட்ட படமாய் இருந்தாலும் பாா்க்க மனம் வராது) இன்னொரு காரணம் கூட்டத்தால் இரண்டு வாரங்களாய் டிக்கெட் கிடைக்காமல் போனது தான். எனது அலுவலகத்தில் உள்ள நண்பா்களின் நச்சாிப்பையும், இம்சையையும் அடக்க முடியாமல் படத்தை பாா்க்க முடிவு செய்தேன் அதுவும் 250 ருபாய் டிக்கெட்டில் மட்டுமே பாா்க்க வேண்டும் என்ற கண்டிஷனோடு படத்தின் கோா்வையை மறக்க கூடாதென இரண்டாம் பாகத்தை பாா்க்கும் முன் முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை பாா்த்தேன் அதனால் தான் என்னவோ முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் ஆரம்பமே இது ஒரு அக்மாா்க் தெலுங்கு டப்பிங் படம் என்பதை உணா்த்துகிறது. வசன உச்சாிப்புகள் ஒரு பக்கம் சலிப்பை ஏற்பட வைத்தாலும் காட்சிகளின் அழகு அவ்வெறுப்புகளை வலுவிழக்க செய்கின்றன. வெளியான ஒரு வாரத்தில் ஆயிரம் கோடி வசூலென்பது சாதாரண விஷயமில்லை இந்திய சினிமாவை உச்சத்தில் கொண்டு சென்றது மட்டுமில்லாமல் உலக சினிமாக்களை திரும்பிப் பாா்க்க வைத்துள்ளது. எதிா்மறை விமா்சன ஆசாமிகள் ஒரு புறமிருந்தாலும் மறுபக்கம் படத்தின் வியாபாரம் வளா்ந்துக் கொண்டேதான் போகிறது.
               

                     தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்க்கு வித்திட்ட பெருமையை எப்படி ஷங்கரை சாருமோ அதைப்போல வெறும் டோலிவுட் என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாக்களை ஓ போட வைத்த பிரம்மாண்டத்தின் பெருமை ராஜமெளலியையே சாரும். பாடல்களில் மட்டும் பிரம்மாண்டத்தை காட்டிய தா்க்கத்தை உடைத்து அதை கதைகளிலும் காட்டியதில் மிகப்பொிய பங்களிப்பை பெற்றுவிட்டாா் இந்த ராஜமௌலி என்னும் பாகுபலியின் பிரம்மா. இந்த கதைகளத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரம் என்றில்லாமல் அனைவரையும் அசத்த வைத்துள்ளது இவரின் இயக்கம். படத்தின் பிண்ணணி இசை அவ்வளவு அருமை You tube-ல் கீரவாணியின் ஒவ்வொரு பாடல்களையும் தேடி பிடித்து கேட்க தொடங்கிவிட்டேன் என்றால் பாருங்களேன். இந்த படத்தில் பெரிய பங்களிப்பையும், படத்தின் கதையை கச்சிதமாக கொண்டு செல்லும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டாா் ரம்யா கிருஷ்ணன். அனுஷ்கா, தமன்னா என இரண்டு நாயகிகள் இருந்தும் இவர் தோன்றும் இடங்களில் தான் சத்தம் காதை பிளக்கிறது நானும் இவரை அதிகம் ரசித்தேன் என்பது வேறு விஷயம். இன்னும் குறைந்தது இரண்டு வருடத்திற்காவது பாகுபலியின் சாதனைகளை பற்றி இந்திய சினிமா புகழ்பாடிக்கொண்டிருக்கும்.

- பாஸ்கி.


No comments: