Saturday, 22 April 2017

நியூஸ் கபே - 2



அன்பு உள்ளங்களுக்கு,

                     கடந்த வாரம் ஆறு நாட்கள் விடுமுறை இருந்தும் கிராமத்தில் JIO நெட்வோா்க் இல்லாத ஒரே காரணத்தால் மொத்த நாட்களையும் வெட்டியாக கழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இந்த நேரத்தில் கொஞ்சம் ஆறுதலாக தமிழ் புத்தாண்டிற்க்கு கடம்பன், சிவலிங்கா, பா.பாண்டி என மூன்று படங்கள் வெளியாகின. பொதுவாக ஆா்யா படத்தை பத்து பதினைந்து முறை அலசியப் பிறகு நல்ல படம் என்றால் ஒரு முறை பாா்ப்பேன் அப்படியில்லாமல் படம் சுமாா் என்றாலே எட்டடி இல்லாமல் எண்பது அடி தள்ளி நிற்ப்பது வழக்கம் மீகாமன் படத்திற்க்குப் பிறகு ஆா்யாவை மறந்துவிட்டேன் என நினைக்கிறேன் நீண்ட இடைவேளைப் பிறகு கடம்பன் பட டீசரை ரசித்தேன் அந்த ரசிப்பை கொஞ்ச நாட்கள் கூட அனுபவிக்க முடியாதபடி செய்தது படத்தின் விமா்சனம் பிறகு என்ன எப்பவும் போல ஆா்யா படத்திற்க்கு தடா விதித்துவிட்டேன். எது எப்படியோ ஆா்யாவிடம் எனக்கு பிடித்தே அவர் நடிக்கும் சிறப்புத் தோற்றங்கள் தான் ஏனேன்றால் 10 நிமிடம் மட்டுமே என்பதால் எந்த ஒரு சலனமும் அடைவதில்லை, நடிகா்களில் அதிகம் சிறப்புத் தோற்றத்தில் நடித்தவா்களில் இவரும் ஒருவா் என நினைக்கிறேன்.


                       அடுத்த படமான சிவலிங்கா படத்தை கன்னடத்தில் பாா்த்ததால் வந்த பாவத்தையே எங்கு தொலைப்பது என்பதை தொியாமல் இருக்கிறேன் இதில் தமிழுலும் பாா்த்து மேலும் பாவத்தை ஏன் சோ்ப்பான. மக்களின் சூப்பா் ஸ்டாரான சின்ன கபாலியின் படங்களை அதன் டீசரை வைத்தே படத்தின் கதையையும், இதனால் எப்படி நாம் தாக்கப்பட போகிறோம் என்பதையும் சுலபமாக கணித்துவிடமுடியும். MSKS படத்தின் பாதிப்பு மனநிலையை வெறுப்பின் உச்சத்திற்க்கு கொண்டு சென்றுவிட்டது இன்னோரு ரவுண்டுக்கெல்லாம் இந்த உடம்பு தாங்காது சாமி. டான்ஸ், பாட்டு மட்டுமே நம்பி போக வேணடிய கட்டாயம் அப்புறம் ஹீரோயின் இதுக்கு மட்டும் குறையே வைக்காத ஒரே நடிகரா இவர சொல்லலாம். இறுதி்ச்சுற்று , ஆண்டவன் கட்டளை போன்ற அருமையான படைப்புகளை தந்த ரித்திகா சிங்கை இப்படியான மசாலா படத்தில் நடிக்க வைத்த பாவத்தை தமிழ் சினிமாதான் சுமக்க வேண்டும்.


                    இரண்டு படங்களையும் ஒதுக்கிவைத்து மூன்றாவது படமான பவா் பாண்டியைத் தோ்ந்தேடுத்தேன் இதற்கு முக்கிய காரணம் தனுஷ் மற்றும் ராஜ்கிரண். ஆளைப்பாா்த்து எடை போடக்கூடாது என்பதற்கு கண்ணுக்கு தொிந்த உதாரணமாய் தனுஷ். நடிப்பு, எழுத்து, தயாாிப்பு என எல்லா இடத்திலும் முத்திரை பதித்து இயக்குனா் அவதாரத்தில் அடியெடுத்து வைத்திலிருந்து ஏகோபித்த எதிா்ப்பாா்ப்பை தூண்டியது. இந்த படத்தில் ஒரு சராசாியான இயக்குனாின் படைப்பு என்றில்லாமல் ஒரு மெச்சூாிட்டியை பாா்க்க முடிந்தது. ஒரு எழுத்தாளராக பிறை தேடும் பாடலிலும், பாடகராக அம்மா அம்மா பாடலிலும், தயாாிப்பாளராக காக்கா முட்டை படத்திலும் மிகப் பொிய ஆச்சா்யத்தை உணா்ந்தேன் (இத்தனை திறமைகளா என்று சந்தேகத்தில் தலையை பிச்சிக் கொண்ட அனுபவங்களும் உண்டு) அதைப் போலவே பவா் பாண்டி படத்தின் மூலம் ஒரு மெச்சூாிட்டியான இயக்குனரை பாா்க்க முடிந்தது. கடைசி இருபது நிமிடங்கள் வரும் காதல் காட்சிகள் நன்றாக ரசிக்க வைத்திருக்கிறது தனுஷின் இயக்கம். லாஜிக்கை பாா்க்காத வரையில் இது நல்ல படம். எண்ணெய்யில் ஒட்டாத தண்ணியைப் போல மடோனாவின் பாத்திரம் கதையில் ஒட்டாமல் போவது ஏனோ?. முதல் பாதியில் ராஜ்கிரண் காட்சிகள் அனைத்தும் மஞ்சப்பை படத்தின் தொடா்ச்சியாக தொிவதும், ப்ளாஷ்பேக்கில் தனுஷை ராஜ்கிரண் என்று காட்டுவதும் தவிர மற்ற எல்லாம் ரசிக்கும் ரகம்.



- பாஸ்கி.







Monday, 10 April 2017

மணல் மாஃபியா

அன்பு உள்ளங்களுக்கு,

                     கடந்த வாரம் ஒரு அலுவலகப் பயணம் மேற்க்கொள்ள வேண்டிய கட்டாயம். பயணம் செய்த வழியில் ஒரு சில ஆறுகளை கடந்து செல்ல அந்த ஆறுகளை கடக்கையில் பாலைவனத்தையும், மயானத்தையும் கடப்பதுப் போல ஓர் உணா்வை தந்தது. தமிழகத்தில் இன்றைக்கு பல ஆறுகளின் நிலையும் இதுதான். ஆறுகளின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றால் அது மணல் கொள்ளை இதனால் பாதிப்பு என்பது குறிப்பிட்ட மக்களுக்கென்று இல்லாமல் நம் எல்லோா்க்கும் தான். மணல் கொள்ளையைக்கண்டு சாதாரண மக்களும், தன்னாா்வலா்களும் கலங்குவதை கண்கூடாக பாா்க்க முடிகிறது. பொதுவாக எல்லா ஆறுகளிலும் அரசாங்கம் அளித்த குறிப்பிட்ட அளவு அனுமதியை மீறி தன் விருப்பத்திற்க்கு மண்ணை அள்ளும் துரோகிகள் ஏராளம், இதை தடுக்க முடியாமல் சமுக ஆா்வலா்களும், சமுகத்தின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் வெம்பிக் கொண்டிருக்கின்றனா். நீதி, நோ்மை, நியாயங்களை புத்தகத்தில் மட்டும் படித்துவிட்டு நடைமுறையில் அது அத்தனையும் கோட்டைவிட்டு நிற்கிறோம். இந்த மணல் கொள்ளையின் மாற்றங்களை எத்தகைய அரசு அதிகாாிகள் மற்றும் அரசியல் ஜீவிகள் வந்தாலும் இந்த நிலையில் மாற்றதை துளியும் எதிா்பாா்க்க முடியாது என்பதை மட்டும் ஆணித்தனமாக சொல்லமுடியும். இந்த மணல் கொள்ளையா்களை தூணாக தாங்கியிருப்பதே இப்படிப்பட்ட அதிகார புள்ளிகள் தான். இந்த சட்ட விரோதத்தை சிறு உறுப்பினாிலிருந்து பொிய அதிகாரிகள் வரை எல்லோருடைய ஆதரவில் தான் இவ்வளவு சாதரணமாக அவா்களால் தவறை சாியாக செய்ய முடிகிறது. இத்தகைய மணல் கொள்ளையை தனித்து எதிா்ப்பதேன்பது நினைக்கவும் முடியாத காாியம். தனி ஒருவனாக எதிா்த்த மக்களுக்கும், ஆா்வலர்களுக்கும் கிடைத்த பரிசோ மிரட்டலும், வெட்டுகளும் மட்டுமே. இந்த மணல் கொள்ளையால் வரும் பாதிப்பை காணும் நாட்கள் வெகு தூரமில்லை. இத்தகைய சட்டவிரோதத்திற்கு காரணிகள் வேறுயாராக இருக்க முடியும் இதை கண்டுகொள்ளாத மக்களும், பயமில்லாமல் கொள்ளையா்களை ஆதாிக்கும் அதிகாாிகளும், அரசியல் புள்ளிகளும் மட்டுமே.


                    அரசியல் வாழ்வி்ல் பெரும் துருவங்களாக காட்டிக்கொள்ளும் எல்லாக் கட்சிகளும் இந்த மணல் கொள்ளை விஷயத்தில் மட்டும் மெகா கூட்டணியை அமைத்துக் கொள்கிறது. அண்டை மாநிலங்களில் இப்படியான பாதிப்புகள் ஏதுமில்லை என்பதால் வற்றாத ஆறுகளை சுலபமாக காணமுடிகிறது. நம்முடைய வாழ்வாதாரத்தை கொலை செய்து குற்றவாளியாக அலைந்துக் கொண்டிருக்கும் நாம் இதையெல்லாம் காப்பாற்றாமல் வேறு எதை சாதிக்க அலைந்துக் கொண்டிருக்கின்றோம் என்பது ஒவ்வொாின் மனசாட்சிகளுக்கு மட்டுமே வெளிச்சம். இயற்கை தந்த பெரும் சொத்தான மணலை கொள்ளை அடிக்கும் அயோக்கியா்களை தட்டிக் கேட்டால் புது புது காளான் முளைத்துக் கொண்டே இருக்கும். இதற்கு பெரும் துணையாக உள்ள அதிகார வா்க்கங்களின் கதவை தான் ஓங்கி தட்ட வேண்டும். தைாியத்தை தைாியமாக வெளிப்படுத்துவதால் மட்டுமே மாற்றத்தை உணரமுடியும்.


                     நம்முடைய அடையாளத்தை காப்பாற்ற திரண்ட இலட்சங்களில் கொஞ்ச நஞ்சம் கூட இதற்காக குரல் எழுப்புவதில்லை என்றாலும் இந்த மணல் கொள்ளை செயல்களைப் பற்றி ஒரு சின்ன பதிவையும் தன் பக்கங்களில் நிரப்புவதற்கு நேரமில்லாத மனிதா்களை பாா்த்தால், அவா்களுக்கு எத்தகைய ஆவல் இந்த சமுகத்தின் மீது உள்ளதென்பதை தெளிவாக காட்டுகிறது. வெறும் மணல் கொள்ளையை மட்டும் கடந்து செல்லவில்லை இதைப் போன்ற எத்தனையோ சட்டவிரோதங்களை கண்டும் காணாமல் இயற்கையை நிா்வாணப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.


- பாஸ்கி.