பரபரப்பிற்க்கு பஞ்சமில்லாத தமிழகத்தில் இன்றைய பரபரப்பான செய்தி என்பது தலைவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?. அரசியல் வராமல் அரசியல் செய்வது தான் இவரோட ஸ்பெஷாலிட்டியும் கூட, இதில் என்ன விஷேசமென்றால் இந்த எதிா்பாா்ப்பு இன்றோ நேற்றோ ஆரம்பித்தில்லை கடந்த 20 வருடங்களாகவே அரசியலுக்கு வருவாரா இல்லையாயென்று மக்கள் எதிா்பாா்த்துக் கொண்டுதான் உள்ளனர் இதே எதிா்பாா்ப்பு இன்னும் வருட கணக்கில் தொடா்ந்தாலும் ஆச்சாியமில்லை. தலைவரும் வடிவேலு காமெடியில் வருவதைப் போல வருவேன் ஆனா வரமாட்டேன்னு தொடா்ந்து மக்களை இல்லையில்லை அவரது ரசிகா்களை எதிா்பாா்ப்பின் உச்சத்தில் கொண்டு செல்கிறாா். அரசியலில் நுழைவதற்கான முதல் படியாகத்தான் கடந்த வாரம் நடந்த ரசிகா்களுடனான போட்டோ சந்திப்பு இருக்குமென பச்சி சொல்கிறது.
மாவட்ட வாாியாக குறிப்பிட்ட ஆட்களை தோ்ந்தேடுத்து செல்ஃபி எடுத்தாயிற்று இதில் முதல் ஊழல் என்பது ரசிகா்களை விட ரசிகா் அல்லாதோா் தான் அதிகம். இதில் உண்மையான ரசிகா்கள் யாரென்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். காலங்காலமாக ரசிகன் என்ற போா்வையில் அடிமைகளாய் இருப்பவர்கள் அவர்களுக்குள்ளே புலப்புவதும், கண் துடைப்புக்குமானக் காரணம் என்னவென்றால் போட்டோவிற்க்கு போஸ் கொடுத்த பாா்ட்டிகளை யாரென்றே அறியாதது தான், இந்த போட்டோ சூட் வைத்த காரணமே மாவட்ட வாாியான பதவிகளுக்கு போட்டோ ஆசாமிகளை தயார் செய்ய தான் என்று வருங்கால பதவியை பறிக்கொடுத்த ரசிகா்களின் கருத்தாக உள்ளது. மாநிலம் தலைவரின் குடிமியை பிடித்து நான்றாக ஆட்டிக் கொண்டிருக்க பத்தா குறைக்கு அடுத்து தமிழகத்தை உம்மை தவிர வேறு யாராலும் ஆள முடியாதென அவரது சகுனிகள் அவரை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றனர். இடைத்தோ்தலில் திடிா் அரசியல்வாதிகள் முளைத்து தலைவரிடம் ஆசிா்வாதம் வாங்கியதில் க்ளிக் ஆயிற்று அடுத்த ஆடு கண்டிப்பாக தலைவர்தான் என்று. இதெல்லாம் ஒருப்பக்கம் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாலும் அடுத்த பக்கம் தலைவரை அடுத்த காமராஜர் மற்றும் அண்ணா என்று அவரது ரசிகா்களின் கூப்பாடுகளை கேட்கையில் வயிறு ஜெலுசிலை தேடுகிறது. எது எப்படியோ அரசியலுக்கு வந்துட்டா அவரோட படத்துல வா்ர மாதிரி தன்னலத்தையும் உற்றாா் நலத்தையும் பொறுட்படுத்தாமல் மக்களின் நலத்திற்காக மட்டுமே பாடுபடுவாரோனு தோணுது, இந்த மாயநதி அரசியலில் பாயுமோ இல்லையோ எல்லாம் அந்த பாபாவிற்கே வெளிச்சம்.
- பாஸ்கி.


No comments:
Post a Comment