Friday, 14 July 2017

இசையிலும் திணிக்கப்படும் இந்தி

                   

                    A.R.ரஹ்மான் அவர்கள் இங்கிலாந்தில் நிகழ்ச்சி ஓன்றில் அதிகம் தமிழ் பாடல்களை பாடியதால் வடஇந்தியர்கள் வெளியேறினார்கள் என்னும் செய்தி வெறும் செய்தியாக மட்டும் இல்லை இது மொழி வெறியாகதான் இருக்க முடியும் எனத் தோன்றுகிறது. இசையை மட்டும் ரசிக்க வேண்டிய இடத்தில் மொழியை மட்டுமே ரசித்திருக்கிறார்கள். புரியாத மொழியின் பாடல்களுக்காக இவர்கள் நிகழ்ச்சியை வெறுத்தாா்களா என்றால் நிச்சயம் வாய்ப்பில்லை அங்கு இந்தி அல்லாதவர்களின் வளர்ச்சியை தான் வெறுத்திருக்க வேண்டும். பெங்களூரில் பிரபலமான கிளப் ஒன்றில் வார இறுதி நாட்களில் தென்னிந்திய மற்றும் வட இந்தியாவின் எல்லாவித ஜீவிகளும் கூடுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் மூழ்குவதும் வழக்கம். நெருங்கிய நண்பரோடு நானும் ஒருமுறை கிளப்பிற்க்கு சென்றிருக்க நிகழ்ச்சியில் ஆர்கெஸ்ட்ரா ஆரம்பித்த அடுத்த நொடியில் எந்த மொழி பாட்டை முதலில் பாடுவதென திகைத்திருந்த சமயம் இந்தி பாட்டை பாட வேண்டும் என மெஜரிட்டியை காண்பித்தார்கள் வட இந்திஸ் மற்றவர்களும் விட்டுகொடுக்க இனிதே ஆரம்பமானது நிகழ்ச்சி இந்திவாலா இல்லாதோரும் புரியவில்லை என்றாலும் இசையை ரசித்துக் கொண்டிருந்தோம். சுமார் ஒரு மணி நேரம் கழித்து தென்னிந்திய பாடல்களை பாட ஆரம்பித்தும் இந்திவாலாக்கள் எழுந்து வெளியே போக ஆரம்பித்தாா்கள் ஏன் என்றதும் எப்படியும் எங்களுக்கு புரியப்போவதில்லை எனவே வெளியேறுகிறோம் என்றாா்கள். அப்பொழுதும் இதைப் போலவே அங்கிருந்த தென்னிந்தியர்கள் கொதித்துப் போனார்கள். இத்தகைய கீழ்த்தரமான செயல்களை சொந்த நாட்டில் செய்வதையே பொறுத்துக் கொள்ள முடியாது இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் அங்கு நடைப்பெற்ற நிகழ்ச்சியின் பெயரே நேற்று இன்று நாளை என தமிழில் வைக்கப்பட்டது தெரிந்தும் இவர்கள் எப்படி இந்தி பாடல்களை எதிர்பாா்த்தார்கள் என்பதுதான்.

                  பொதுவாக டெல்லி மற்றும் மும்பை போன்ற பெரிய நகரங்களில் சொந்த தொழில் செய்பவர்களாகட்டும் இல்லை மத்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களாகட்டும் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் ஆனால் சென்னை மற்றும் பெங்களுரில் அப்படியல்ல அனைத்து மாநில ஜந்துக்களும் புழங்கும் நகரங்கள் இவை அதிலும் வட இந்தியர்கள் மற்ற தென்னிந்திய நகர மக்களைக் காட்டிலும் சற்று அதிகம் காணப்படுகிறாா்கள். இவர்களின் இனவளர்ச்சி ஒரு புறம் பெருகிக் கொண்டிருக்க மற்ற எல்லாத் துறைகளிலும் முக்கியமாக தென்னிந்தியாவில் இவர்களின் தொழில் வளர்ச்சியை பெருக்க வேண்டும் என்பதே வட(இந்தி)யர்கள் திட்டம். மற்ற தென்னிந்திய நகரங்களில் ஐடி நிறுவனங்களின் ஆதிக்கம் அவ்வளவாக இல்லாமல் இருந்தாலும் பெங்களூரில் இதன் ஆதிக்கம் அதிகம். இதில் வேலை செய்பவர்களில் 70 சதவிகிதம் இந்திவாலாக்களே இத்தகைய மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு இவர்கள் போடும் ஆட்டத்தை பார்க்கையில் இரத்த கொதிப்புதான் மிஞ்சும். தென்னிந்தியர்கள் (முக்கியமாக தமிழர்கள்) மீது அவர்கள் வீசும் பார்வைகள் ஒரு விதமான வெறுப்பை அளிக்கும். இதுமட்டுமல்ல இந்திவாலாக்கள் லீட் ஆகவோ இல்லை மேனேஜராகவோ அமைந்துவிட்டால் அதோகதிதான்(சிலர் மட்டும் தப்பிதவறி நல்லவர்களாக இருப்பதுண்டு). இத்தகைய வெறுப்புகளோடு தான் பயணிக்க வேண்டுமென்பது நம் தலைவிதியாய் உள்ளது.

தமிழ் பாடல்கள் மட்டுமல்லாமல் ஏதேச்சையாக தமிழ் வார்த்தைகளை கேட்டாலே ஏதோ குற்ற உணர்விற்கு தள்ளப்படும் ஜடங்கள் நம்மை இந்தி கற்க வேண்டுவது எந்த வகையில் நியாயப்படுத்துவதென்று விளங்கவில்லை. இந்தி தெரிந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலைமை என்றும் வரப்போவதில்லை என்பதை இந்திவாலாக்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

- பாஸ்கி.

No comments: