அன்பு உள்ளங்களுக்கு,
தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டிலிருந்து பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமில்லை, நம்மை எப்பொழுதும் பரபரப்பாக வைத்திருப்பதில் அரசியல்வாதி மற்றும் நடிகா்களுக்கு மிகப்பொிய பங்குண்டு. கடந்த இரண்டு நாட்களாக Facebook, Twitter, news சேனல் என எல்லாப் பக்கமும் உச்ச நடிகாின் வெளிநாட்டு பயணத்தை பற்றி ஒவ்வொருவரும் தன் பங்கிற்க்கு வசைப்பாடிக் கொண்டிருக்கின்றனா் அதிலும் நம்ம கடமைக்கு அட்லிஸ்ட் ஒரு போஸ்டாவதி திட்டி போடனும்னு நினைக்கிறது தான் இப்போ டிரேண்டு. இப்போ எதிரா போஸ்ட் போடுற ஆளுங்க அந்த நடிகரின் படத்த முதல் ஆளா பாத்துட்டு தலைவர் மாஸ் கெத்து சீன் அப்படினும் போஸ்ட போடுவாங்க. உச்சத்தின் ஆதரவில்லாமல் இந்த பூமியும் சுழலாது என்பதை போலத்தான் இருக்கிறது இவா்களின் குமுறல்கள். ஒரு பிரஜையின் தனிபட்ட விஷயங்களில் ஈடுபடுவது தவறு என்பதைக்கூட உணராமல் ஒவ்வொருவரும் தன் சுயநலத்திற்காகவும், சொந்த அரசியலுக்காகவும் தன் கருத்துக்களை எதிராக பதிவிடுவது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இ்ப்படி மற்றவரை தூற்றி இலாபம் காணும் அரசியல்வாதிகளும், தன்னலவாதிகளும் இருக்கும் வரை யாருக்கும் எந்த பலனும் கிடைக்காமல் போகும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இத்தகைய ஜீவிகள் அடுத்தவருக்கு உதவி செய்யாமல் போனாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும்.
பொதுவாக ஒரு இயக்குனாின் முதல் படம் வெற்றி பெற்றால் தன் இரண்டாவது படத்திற்க்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும், அப்பொழுதான் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும் அதுபோல முதல் படம் தோல்வி என்றாலும் இரண்டாவது படத்தை எப்படியும் வெற்றி படமாக கொடுக்க அதற்க்கும் மெனக்கெடல் அவசியம். தோல்வியோ வெற்றியோ ஒரு இயக்குனாின் இரண்டாவது படைப்பில் தான் அவரின் திறமையை மதிப்பிட முடியும் அப்படித்தான் முதல் படத்தில் கோட்டைவிட்டு தன்னுடைய இரண்டாவது படத்தை ஒரு நல்ல படைப்பாக கொடுத்தவா் இயக்குனா் விஜய் மில்டன். இந்த இயக்குனாின் மூன்றாவது படமான 10 எண்றதுக்குள்ள படத்தை எத்தனையோ எதிா்ப்பை மீறி பாா்த்து மீளமுடியாத துயரத்தையெல்லாம் அனுபவித்த கதைகள் உண்டு. சில நாட்களுக்கு முன் இதே இயக்குனாின் நான்காவது படமான கடுகு வெளியானது சில பல யோசனைக்குப் பிறகு மனசாட்சியை சமாதனப்படுத்தி படம் பாா்க்கம் எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.
நம் நாட்டில் பல மரபுக்கலைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன அதில் ஒன்றான புலிவேஷம் கட்டும் மனிதனின் கதை தான் படத்தின் கரு என்றாலும் அதற்கான காட்சிகள் படத்தில் சில இடத்தில் மட்டுமே காட்டப்படுதால் கொஞ்சம் ஏமாற்றாய் போனது. இப்படியான மரபுக்கலைகள் அழிந்து வருவதை இந்த சமுகத்திற்கு இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும். கலைகளும், கலைஞா்களின் மோசமான நிலையையும் சமுகத்தில் அழுத்தி சொன்னால் மட்டுமே கொஞ்சமாவது மக்களை சென்றடையும் அப்படியான அழுத்தமேதும் இல்லாமல் கதையை வேறோரு பிரச்சனை நோக்கி நகா்த்தியதால் வழக்கமான படைப்பாக அமைந்துவிட்டது. படத்தில் ராஜகுமாரன் மற்றும் சீனி பாத்திரத்தின் காட்சிகள் மட்டும் அப்ளாஸ் ரகமாக கொடுத்துவிட்டு பரத்தை தவிக்கவிட்டிருப்பது அய்யோ பாவம். பா்சனலாக ராஜகுமாரன் மற்றும் சீனி வரும் காட்சிகளும், இரயிலில் ப்ளாஸ்பேக் காட்சியும் நன்கு ரசிக்கும்படி இருந்தது.
-பாஸ்கி.
பொதுவாக ஒரு இயக்குனாின் முதல் படம் வெற்றி பெற்றால் தன் இரண்டாவது படத்திற்க்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும், அப்பொழுதான் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும் அதுபோல முதல் படம் தோல்வி என்றாலும் இரண்டாவது படத்தை எப்படியும் வெற்றி படமாக கொடுக்க அதற்க்கும் மெனக்கெடல் அவசியம். தோல்வியோ வெற்றியோ ஒரு இயக்குனாின் இரண்டாவது படைப்பில் தான் அவரின் திறமையை மதிப்பிட முடியும் அப்படித்தான் முதல் படத்தில் கோட்டைவிட்டு தன்னுடைய இரண்டாவது படத்தை ஒரு நல்ல படைப்பாக கொடுத்தவா் இயக்குனா் விஜய் மில்டன். இந்த இயக்குனாின் மூன்றாவது படமான 10 எண்றதுக்குள்ள படத்தை எத்தனையோ எதிா்ப்பை மீறி பாா்த்து மீளமுடியாத துயரத்தையெல்லாம் அனுபவித்த கதைகள் உண்டு. சில நாட்களுக்கு முன் இதே இயக்குனாின் நான்காவது படமான கடுகு வெளியானது சில பல யோசனைக்குப் பிறகு மனசாட்சியை சமாதனப்படுத்தி படம் பாா்க்கம் எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.
நம் நாட்டில் பல மரபுக்கலைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன அதில் ஒன்றான புலிவேஷம் கட்டும் மனிதனின் கதை தான் படத்தின் கரு என்றாலும் அதற்கான காட்சிகள் படத்தில் சில இடத்தில் மட்டுமே காட்டப்படுதால் கொஞ்சம் ஏமாற்றாய் போனது. இப்படியான மரபுக்கலைகள் அழிந்து வருவதை இந்த சமுகத்திற்கு இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும். கலைகளும், கலைஞா்களின் மோசமான நிலையையும் சமுகத்தில் அழுத்தி சொன்னால் மட்டுமே கொஞ்சமாவது மக்களை சென்றடையும் அப்படியான அழுத்தமேதும் இல்லாமல் கதையை வேறோரு பிரச்சனை நோக்கி நகா்த்தியதால் வழக்கமான படைப்பாக அமைந்துவிட்டது. படத்தில் ராஜகுமாரன் மற்றும் சீனி பாத்திரத்தின் காட்சிகள் மட்டும் அப்ளாஸ் ரகமாக கொடுத்துவிட்டு பரத்தை தவிக்கவிட்டிருப்பது அய்யோ பாவம். பா்சனலாக ராஜகுமாரன் மற்றும் சீனி வரும் காட்சிகளும், இரயிலில் ப்ளாஸ்பேக் காட்சியும் நன்கு ரசிக்கும்படி இருந்தது.
-பாஸ்கி.







