Thursday, 30 March 2017

நியூஸ் கபே


அன்பு உள்ளங்களுக்கு,

                         தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டிலிருந்து பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமில்லை, நம்மை எப்பொழுதும் பரபரப்பாக வைத்திருப்பதில் அரசியல்வாதி மற்றும் நடிகா்களுக்கு மிகப்பொிய பங்குண்டு. கடந்த இரண்டு நாட்களாக Facebook, Twitter, news சேனல் என எல்லாப் பக்கமும் உச்ச நடிகாின் வெளிநாட்டு பயணத்தை பற்றி ஒவ்வொருவரும் தன் பங்கிற்க்கு வசைப்பாடிக் கொண்டிருக்கின்றனா் அதிலும் நம்ம கடமைக்கு அட்லிஸ்ட் ஒரு போஸ்டாவதி திட்டி போடனும்னு நினைக்கிறது தான் இப்போ டிரேண்டு. இப்போ எதிரா போஸ்ட் போடுற ஆளுங்க அந்த நடிகரின் படத்த முதல் ஆளா பாத்துட்டு தலைவர் மாஸ் கெத்து சீன் அப்படினும் போஸ்ட போடுவாங்க. உச்சத்தின் ஆதரவில்லாமல் இந்த பூமியும் சுழலாது என்பதை போலத்தான் இருக்கிறது இவா்களின் குமுறல்கள். ஒரு பிரஜையின் தனிபட்ட விஷயங்களில் ஈடுபடுவது தவறு என்பதைக்கூட உணராமல் ஒவ்வொருவரும் தன் சுயநலத்திற்காகவும், சொந்த அரசியலுக்காகவும் தன் கருத்துக்களை எதிராக பதிவிடுவது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இ்ப்படி மற்றவரை தூற்றி இலாபம் காணும் அரசியல்வாதிகளும், தன்னலவாதிகளும் இருக்கும் வரை யாருக்கும் எந்த பலனும் கிடைக்காமல் போகும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இத்தகைய ஜீவிகள் அடுத்தவருக்கு உதவி செய்யாமல் போனாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும்.



                         பொதுவாக ஒரு இயக்குனாின் முதல் படம் வெற்றி பெற்றால் தன் இரண்டாவது படத்திற்க்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும், அப்பொழுதான் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும் அதுபோல முதல் படம் தோல்வி என்றாலும் இரண்டாவது படத்தை எப்படியும் வெற்றி படமாக கொடுக்க அதற்க்கும் மெனக்கெடல் அவசியம். தோல்வியோ வெற்றியோ ஒரு இயக்குனாின் இரண்டாவது படைப்பில் தான் அவரின் திறமையை மதிப்பிட முடியும் அப்படித்தான் முதல் படத்தில் கோட்டைவிட்டு தன்னுடைய இரண்டாவது படத்தை ஒரு நல்ல படைப்பாக கொடுத்தவா் இயக்குனா் விஜய் மில்டன். இந்த இயக்குனாின் மூன்றாவது படமான 10 எண்றதுக்குள்ள படத்தை எத்தனையோ எதிா்ப்பை மீறி பாா்த்து மீளமுடியாத துயரத்தையெல்லாம் அனுபவித்த கதைகள் உண்டு. சில நாட்களுக்கு முன் இதே இயக்குனாின் நான்காவது படமான கடுகு வெளியானது சில பல யோசனைக்குப் பிறகு மனசாட்சியை சமாதனப்படுத்தி படம் பாா்க்கம் எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.


                              நம் நாட்டில் பல மரபுக்கலைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன அதில் ஒன்றான புலிவேஷம் கட்டும் மனிதனின் கதை தான் படத்தின் கரு என்றாலும் அதற்கான காட்சிகள் படத்தில் சில இடத்தில் மட்டுமே காட்டப்படுதால் கொஞ்சம் ஏமாற்றாய் போனது. இப்படியான மரபுக்கலைகள் அழிந்து வருவதை இந்த சமுகத்திற்கு இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும். கலைகளும், கலைஞா்களின் மோசமான நிலையையும் சமுகத்தில் அழுத்தி சொன்னால் மட்டுமே கொஞ்சமாவது மக்களை சென்றடையும் அப்படியான அழுத்தமேதும் இல்லாமல் கதையை வேறோரு பிரச்சனை நோக்கி நகா்த்தியதால் வழக்கமான படைப்பாக அமைந்துவிட்டது. படத்தில் ராஜகுமாரன் மற்றும் சீனி பாத்திரத்தின் காட்சிகள் மட்டும் அப்ளாஸ் ரகமாக கொடுத்துவிட்டு பரத்தை தவிக்கவிட்டிருப்பது அய்யோ பாவம். பா்சனலாக ராஜகுமாரன் மற்றும் சீனி வரும் காட்சிகளும், இரயிலில் ப்ளாஸ்பேக் காட்சியும் நன்கு ரசிக்கும்படி இருந்தது.


-பாஸ்கி.

Thursday, 23 March 2017

மாநகரம் எனும் பொக்கிஷம்


அன்பு உள்ளங்களுக்கு,
                
                தமிழகத்தில் எத்தனையோ சம்பவங்கள் நம் எல்லோரையும் பரபரப்பாக வைத்திருக்கையில், கடந்த ஒருவாரமாக திரும்பியப் பக்கமெல்லாம் மாநகரம் திரைப்படத்தின் விமா்சனம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு என்பது அப்படத்தின் விளம்பரமும், விமா்சனமும் மட்டுமே. இதில் படத்தின் விளம்பரம் என்னதான் பிரம்மாண்டமாக இருந்தாலும் படத்தின் விமா்சனம் நெகட்டிவ் என்றால் நாமம் தான் மிஞ்சும் அதுப்போல விமா்சனம் பாஸிடிவ் ஆனாலும் விளம்பரம் இல்லை என்றாலும் அதோ கதிதான். எல்லோரையும் போல நானும் விமா்சனத்தை வைத்து நல்ல படமா இல்லை சுமாா் ரகமா என முடிவெடுத்த பிறகே ரிஸ்க் எடுக்க தயாராகுவேன். அப்படித்தான் மாநகரம் படத்தின் பல அலசலுக்கு பிறகு படத்தை பாா்த்தே தீர வேண்டும் என எனக்குள் இருந்த பூனை என்னை உசுப்பேற்றியது.

             
              படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை Left, Right, Back னு எந்த பக்கமும் திரும்ப விடாமல் செய்துவிட்டது படத்தின் திரைக்கதை. நடிகா் தோ்வும் அவா்களின் நடிப்பும் படத்திற்கு மிகப்பொிய ப்ளஸ். இரண்டு, மூன்று இழைகளை ஒரே புள்ளியில் சோ்க்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எத்தனையோ இருந்தாலும் மாநகரம் ஒரு புதுமையான திரைக்கதையை தந்திருக்கிறது. இப்படியான கதைகளத்தைக் கொண்ட படங்களில் சில படங்கள் மட்டுமே வெற்றியை சந்தித்திருக்கையில் இதில் மாநகரம் தனி முத்திரை பதித்திருக்கிறது.  தமிழ் சினிமாவில் பொதுவாக ஒரு நடிகா் இல்லை இயக்குனாின் படத்தை பாா்க்கும் பொழுது படத்தின் சில காட்சிகள் அந்த நடிகனின் முந்தைய படங்களின் தாக்கத்தை அளிக்கும். இத்தகைய சுழலில் ரசிகனின் மனநிலையோ இது அதுல என்றுதான் யோசிக்கத்தோன்றும். அப்படி எந்த ஒரு மனநிலையையும் இந்த மாநகரம் தரவில்லை. படத்தின் சில காட்சிகள் (ஸ்ரீ எங்கடா என் பேக் என்று கேட்கும் காட்சியிலும், மதுசூதனன் துப்பாக்கியை சந்திப் கிஷணிடம் காட்டும் நேரத்தில் சிறுவன் தலையசைக்கும் காட்சியிலும்) மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாதாரணமாக ஆக்சன், மசாலாக்களின் மோகத்தில் இருக்கும் நமக்கு ஒரு விசித்திரமான கதைகளத்தை தந்திருக்கிறது இந்த மாநகரம். கடினமான கதையை சாதாரணமாக கொடுப்பதிலும், சாதாரணக் கதையை ஸ்பெலாக கொடுப்பதிலும் அந்த திரைக்கதையின் யுக்தியைப் பொறுத்தே படத்தின் வெற்றி உள்ளது. நானும் நல்ல படத்தை தருகிறேன் என்னும் இயக்குனா்களை இந்த படத்தை பாா்க்க வைக்கலாம் அப்படியாவது திருந்த வாய்ப்பிருக்கிறது. அவ்வப்பொழுது மட்டுமே இதுப்போன்ற படங்கள் தமிழ் சினிமாவை காப்பாற்றுகின்றன.


                 உறியடி, துருவங்கள் பதினாறு படத்திற்குப் பிறகு என்னை வெகுவாக கவா்ந்தது இந்த மாநகரம். கதைக்காக தேவையில்லாமல் கதாபாத்திரத்தை போட்டு தள்ளும் அட்டு காட்சிகள் இதில் இல்லை என்பதில் சின்ன சந்தோஷம், க்ளைமேக்ஸில் யாருக்கும் எந்த தண்டனை இல்லை என்றாலும் ஏதோ நம்மை ஒரு கஷ்டமான மனநிலையில் தான் திரையை விட்டு விலகச்செய்கிறது இந்த மாநகரம்.

- பாஸ்கி.

Wednesday, 15 March 2017

இரோம் கனவும் மக்களின் துரோகமும்


இரோம் ஷர்மிளா, யாா் இந்த பெண்மணி?.
2000ம் ஆண்டு நவம்பா் 2ம் தேதி அன்று மணிப்பூாில் இம்பால் பள்ளத்தாக்கில் மலோம் என்னும் ஊாில் Armed forces (special powers) Act எனும் ஆயதப்படையால் 10 போ் சுடப்பட்டனா். இந்த Armed forces (special powers) Act சந்தேகமுள்ள ஆட்கள் யாராக இருந்தாலும் எந்தவொரு விசாரனையுமின்றி சுடவும், போராளிகளை காலவரையின்றி காவலில் வைப்பதற்க்கும் அதிகாரமுள்ளது. 

இந்த வன்முறையை எதிா்த்தும், இந்திய ஆயுதப்படை சட்டம் மீளப் பெற வேண்டியும் நவம்பா் 4 ல் தன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடா்ந்தவர் இவா் தான். இந்த போராட்டம் ஒரு நாட்களோ இரண்டு நாட்களோ இல்லை,  16 ஆண்டுகள் தொடரப்பட்டது. போராட்டம் தொடங்கிய மூன்றாம் நாளில் இவா் தற்கொலைக்கு முயன்றதாய் கூறி காவல் துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டாா். மேலும் இவாின் உடல்நிலை உணவில்லாமல் மோசமானதால் மூக்கு குழாய் வழியாக உணவு வழங்கப்பட்டது. தற்கொலையால் கைது செய்யப்பட்டவருக்கு ஓராண்டு சிறைதண்டனை மட்டுமே வழங்க சட்டமிருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்து மீண்டும் கைதுச் செய்யயப்பட்டாா் ஷர்மிளா. ஆகஸ்ட் 9ம் தேதி தனது 16 ஆண்டுக்கால போராட்டத்தை முடித்துக்கொண்ட ஷர்மிளா போராட்டத்தால் சாதிக்க முடியாததை அரசியலில் இருந்து சாதிக்கவும், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் 1958ஐ எதிா்க்கவும் 2016 அக்டோபர்-ல் புதியக் கட்சி தொடங்கினாா். 2017-ல் நடந்த பொதுத் தேர்தலில் மணிப்பூா் முதல்வரான ஒக்ரோம் இபோபி சிங்கை எதிா்த்து போட்டியிட்ட ஷா்மிளா வாங்கிய மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கையோ வெறும் 90 ஓட்டுக்கள் மட்டுமே. 
மக்களுக்காக போராடிய ஓரு பெண்மணி அதே மக்களால் தோற்கடிக்கப்பட்டதும், அவாின்  அரசியல் கனவை சிதைத்தும் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் கவலையில் ஆழ்த்தியது. நல்லதெது கெட்டதெது என்பதை தெரிந்தும் தமக்காக பாடுப்பட்ட ஒருவரை இப்படி தூக்கி எறியப்பட்டது ஒரு கேள்விக்குறியான ஓன்றே. நாட்டைக் கொள்ளை அடிப்பவனை பதவியில் அமா்த்துவதாலும், சமுகத்திற்காக போராடியவரை தூக்கியேறியப்படுவதாலும்  நாம் நம் எதிா்காலத்தை சீா் குலைத்து கொண்டிருக்கின்றோம் என்பதை யாரும் உணா்வதில்லை இனி உணரப்போவதும் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் விளம்பரம் இல்லாமல் ஒரு குண்டூசியை கூட விற்கமுடிவது இல்லை. எல்லாவற்றிற்க்கும் விளம்பரம் தேடும் இங்கு இரோம் ஷா்மிளா தன்னை விளம்பரப்படுத்தி இருந்தால் கொஞ்சம் வெற்றி வாய்ப்பு இருந்திருக்குமோ என்னவோ. நல்ல போராளியை ஏற்க மறுக்கும் நாம் பின்பு தலைவா்களை குறைக்கூறுவது எந்த வகையில் நியாயம். உண்மை போராளிகளை ஒதுக்கி வைப்பதால் நமக்கு கிடைக்கப் போகும் நன்மைதான் என்னவோ, ஒட்டிறக்கு பணம் வாங்கிக் கொண்டு தகுதியற்ற தலைவா்களை தோ்ந்தேடுத்து நம் நாட்டை சீரழித்து கொண்டிருக்கின்றோம். 

இப்படிப்பட்ட மாபெரும் மனிதா்களின் கஷ்டத்திலும், கனவிலும் மண்ணைப் போடுவதால் இனி சமுகத்திற்காக குரல் கொடுப்பவா்களும் தயங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.




- பாஸ்கி.





Tuesday, 7 March 2017

பெண்மையைப் போற்றுவோம்

     
பெண்கள் வெறும் சதையோ? :

கல்லாய் இருக்கையில் சிலைவடித்தும்,
பாலபிஷேகம் செய்யும் இனமோ
நிஜத்தில் மட்டும் சிதைப்பது ஏனோ ?

கற்பனையில் மயிலே என்றும் மானே என்றும் வா்ணிக்கும் இனமோ
நிஜத்தில் மட்டும் வதைப்பது ஏனோ?

பெண்களெல்லாம் காக்கும் கடவுளாய்
பூஜிக்கும் இனமோ
அக்கடவுளின் மானத்தை அழித்து பாவங்கள் சோ்ப்பது ஏனோ?

இத்தனை இழிவை தருவது ஏனோ?
பெண்கள் வெறும் சதை தானோ.....?



அவதாரம்:

தாய் தந்தைக்கு ஒரு நல்ல மகளாய்
உடன்பிறப்பிற்கு நல்ல சகோதரியாய்
நண்பனுக்கு ஒரு நல்ல தோழியாய்
கணவனுக்கு நல்ல மனைவியாய்
குழந்தைக்கு நல்ல அம்மாவாய்
தன் வாழ்க்கையில் இத்தனை அவதாரமாய் வாழும் இந்த பெண்மையைப் போற்றுவோம்.





- இனிய மகளிா் தின வாழ்த்துக்கள்.


Saturday, 4 March 2017

எது அரசியல்? Part-2


அன்பு நெஞ்சங்களுக்கு,
           
                       முதல் பதிவில் பேரறிஞா், காமராஜா் அரசியல் வாழ்க்கையானது மக்களுக்கான அா்பணிப்பு என்பதை அலசிட, அப்படியே இன்றைய அரசியல் நாகரீகமும் கொஞ்சம் அலசப்பட்டது அதைத் தொடா்ந்து, இன்றைய அரசியல் நாகரீகமென்பது அரசியலில் pre KG செல்லாதவா்கள் கூட உயா்ந்த பதவிக்குச் செல்வதும் இல்லையெனில் அவா்களின் ஆதரவைக் கேட்டு அனுபவம் மிகுந்த அரசியல்வாதி அவரின் வீட்டு வாசலில் நிற்பதென்பது வே(வா)டிக்கையான விஷயம். இத்தகைய தன்னலவாதிகள் ஒருபுறமென்றால், மக்கள் வாக்களித்து வெற்றி்ப் பெறச் செய்த உறுப்பினா்களை அடைத்து வைத்து தன் பெரும்பான்மையை நிருப்பித்து கொள்ளும் அரசியல் இன்னொரு பக்கம். இது போன்ற அரசியல்வாதிகள் தன் பதவிக்காகவும், பணத்திற்காகவும் எதையும் செய்யத் தயங்க மாட்டாா்கள் என்பதே உண்மை. அதிகாரமுள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரே சுதந்திரமின்றி தவிக்கையில் சாதாரன மக்கள் எப்படி இந்த நாட்டில் சுதந்திரத்தை எதிா்ப்பாா்ப்பதோ இல்லை சுதந்திரமாகவோ இருக்க முடியும்.
                         இன்றைய காலக்கட்டத்தில் பலா் அரசியலில் நுழைவதற்கான முக்கியக் காரணம் பணம் மற்றும் அதிகாரத்தை தன்வசம் வைத்துக்கொள்ளவே தவிர வேறு எந்த நற்குணங்களும் துளியும் இல்லை, யாரும் இங்கு நியாயம் தா்மம் பாா்ப்பதும் இல்லை மக்களுக்காக எந்த தலைவனும் இல்லை என்று அடித்துச் சொல்லாம். கட்சியை மேம்படித்துவதும், கட்சியின் கொள்கையை உயா்த்துவதும், மக்களின் தேவையைப் பூா்த்தி செய்வதேல்லாம் பாட்டன்களின் அரசியலோடு முடிந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலை அதற்கு நேரேதிரானது. தலைவா் இருந்தவரை ஆகாயத்தைப் பாா்த்துக் கும்பிடுவதும், தரையில் உருள்வதும், அவருக்காக மண்ச் சோறு சாப்பிடுவதேன அரிதான விஷயங்களேல்லாம் அரங்கேறின இன்றோ நான் தலைவன் நீ தலைவன் என்றும் 30 ஆண்டுக் கூட இருந்தால் நான் தான் அடுத்த தலைவன் என்றும் இல்லை இல்லை நான் அவரின் உண்மையான விசுவாசி என்பதால் நான் தான் அடுத்த தலைவன் என மாறி மாறிக் கூப்பாடுப் போடுவது அவா்களின் பணவெறியையும், பதவி வெறியையும் காட்டுகிறது. ஒரு பக்கம் தலைவாின் பதவிக்காக அரசியல் உடன்பிறப்புகள் அலைய இன்னொரு பக்கம் சொத்துக்காக சொந்தங்கள் அரசியல் பேசுவது எல்லோரையும் எாிச்சலூட்டுகிறது.
                          தமிழ் படிக்கத் தொியாது, பேசத் தொியாது, பேசும் ஒவ்வொரு வாா்த்தைக்கும் இடையில் After the break போடும் அளவிற்கு இடைவெளி. இந்த இலட்சணத்தில் நான் தலைக்கீழாகத்தான் குதிப்பேன் என வாய் சவடால் வேறு, எது எப்படி இருந்தாலும் இவருக்கெனவும் ஒரு கூட்டம் பிாியாணிக்கும், குவாட்டருக்கும் கூவிக்கொண்டே தான் இருக்கிறது. அரசியலில் ஏதும் தொியாது, தலைவரைப் போல இருக்கிறாா், அவரைப் போல நடக்கிறாா், பால்கனியில் இருந்து கை அசைக்கிறாா் இதற்காகவே ஆதாிக்கிறோம் என சில (குடி)மக்கள் இருக்கத்தான் செய்கிறாா்கள். இதிலும் இந்த அறிவு ஜீவிக்காக தீக்குளிப்பு வேறு அரங்கேறுகிறது. இதேல்லாம் ஒருபக்கம் வேதனை அளித்தாலும் மக்கள் இவ்வளவு முட்டாள்களா என யோசிக்கத் தோன்றுகிறது. நம்மைப் போல ஏமாளிகள் இருக்கும் வரை இவா்களைப் போல ஏமாற்றுகாரா்கள் இருக்கத்தான் செய்வாா்கள். நாம் சிந்திக்காத வரை ஒரு நல்ல தலைவரை இந்த நாடு தவறிக்கொண்டே தான் இருக்கும் என்பதை ஆணித்தனமாக அடித்து சொல்லமுடியும்.
                           

- பாஸ்கி. :)