Thursday, 22 June 2017

தளபதிக்கு வாழ்த்துக்கள்



                  இளைய தளபதி இன்று தளபதியாய்.., இன்னும் அடைமொழியில் இளைய என்ற வார்த்தைக்கு இடம் இருக்கபோவதில்லை என்றுதான் தோன்றுகிறது. தெறிக்கு பிறகு அட்லியுடனும், அழகிய தமிழ் மகனக்கு பிறகு ரஹமான் கூட்டணியுடன் வரவிருக்கும் மெர்சல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தளபதியின் பிறந்த நாள் பரிசாக வெளியாகின. இந்த முதல் பார்வை போஸ்டர் சந்தேகமில்லாமல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பெரும் எதிர்பாா்ப்பை தந்திருக்கிறது. மற்றவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் ரசிக்கலாம் ஆனால் நான் ரசிப்பவை மற்றவர்களை விட சற்று வித்தயாசமானவை ஆக இருக்ககூடும். எல்லோருக்கும் ஒவ்வொரு புது படத்தின் முதல் பார்வை போஸ்டரின் எதிர்பார்ப்பு சில கோணங்களில் இருக்கும் ஆனால் நான் எதிர்பாா்க்கும் ஒரே விஷயம் அதே கண்கள் தான். எல்லா படத்தின் முதல் பார்வை போஸ்டரிலும் கண்களை மட்டும் ரசிப்பவன். மற்றவர்கள் எத்தனையோ விஷயங்களை தளபதியிடம் ரசிக்கலாம் ஆனால் நான் ரசிக்கும் விஷயம் திரைக்கு முன்னால் நடனம், ஆக்சன் மற்றும் நகைச்சுவை அதே திரைக்கு பின்னால் அமைதியும், அவமானங்களை எதிர்கொள்ளும் திறமைகளையும் தான்.


                     சிறுவயதில் அஜித், விஜய் என நண்பர்களிடம் சண்டையிட்ட காலங்களில் அவ்வளவாக இல்லாத ஈர்ப்பு குஷியில் ஆரம்பித்தது இந்த தளபதியின் ரசிகனாய் எனது பயணம். சிலருக்கு சிலர் தலைவர்கள் அப்படிதான் நான் ரசிக்கும் தலைவனாய் தளபதி. ஆக்ஷன் ஹீரோவாக மாறிய காலகட்டம் முன்னால் ரோமான்டிக் ஹீரோவிற்கு ரசிகன், ரசிகையாய் இருந்தவர்கள் கொஞ்சம் மாற்றத்தை ஏற்க முடியாமல் தத்தளித்தார்கள் ஆனால் இன்னபிற ரசிகர்களோ ஆக்ஷனை ரசிக்க ஆரம்பி்த்தார்கள். ஒன்றை தொலைத்தே இன்னொன்றை பெறமுடியும் அல்லவா அப்படிதான் இதுவும். கட்அவுட், பாலபிஷேகம் போன்ற தீவிரத்தை செய்யாத அளவிற்க்கு இந்த ரசிகனின் பயணம் தொடரும்.  

தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



- பாஸ்கி.

Monday, 19 June 2017

மரகத நாணயம்



அன்பு உள்ளங்களுக்கு,

                    இந்த வாரம் வெளியான படங்களில் இந்திய சினிமாவில் புதிய முயற்சி என்று பேசப்பட்ட பீச்சாங்கை படத்தை பார்க்க வேண்டுமென ஆர்வத்தில் இருந்தேன். வலைதளங்களில் தோழர்கள், தோழிகளின் கூச்சல் இல்லையில்லை அவர்களின் விமர்சனங்கள் என்னை மரகத நாணயம் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. கோலிவுட் இன்னும் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஆவி கதைகளை கைவிடப்போவதில்லை என்பது உறுதி. படத்தின் ஆரம்பமே அசத்தல் (டைட்டில் கார்டில் வரும் பழங்கால கதை), ஆம் ஆரம்பம் அசத்தல் தான் அதற்கு பின் வரும் முப்பது நிமிட கதை சாட்சாத் தமிழ் சினிமாவில் வரும் பாரம்பரியமிக்க அதே காதல் காட்சி தான். 132 பேரை கொன்ற மரகத நாணயத்தை எடுக்க ஊரே நடுங்கினாலும் நம்ம ஹீரோ தைரியமாக களமிறங்குவதே கதை. இத்தகைய கதைகளத்தை தமிழ் சினிமா முப்பது நாற்பதுகளிலேயே ஆரம்பித்திருந்தாலும் இன்றைய காலத்திற்க்கு ஏற்ப திரைக்கதையில் காமெடி கலந்து சொன்ன விதமே சிறப்பு. எல்லாம் ஒகே பாஸ் முதல் முப்பது நிமிஷம் சுமார் ரகம்னு சொல்லிட்டிங்க முப்பது நிமிடங்களுக்கு பிறகு என்ன ஆச்சு?


                    காலம் தாழ்த்தாமல் விமர்சனத்திற்க்குள் நுழைந்துவிடுகிறேன். இதுதான் எதிர்கால எழுத்திற்க்கு நல்லதும் கூட, சரியாக கணிக்க முடியவில்லை என்றாலும் தோராயமாக ஒரு முப்பது நிமிடங்களுக்கு பிறகு படம் சுடுபிடிக்க ஆரம்பிக்கிறது. ஹீரோவிடம் அடி வாங்கியோ இல்லை ஹீரோவை கலாய்த்தோ சிரிக்க வைக்கும் காட்சிக்கு இடமேயில்லை கதையோடு நகரும் காட்சியில் இவ்வளவு இயற்கையாக நகைச்சுவை திணிக்கப்பட்டுள்ளது. படத்தில் காமெடிக்காக நிறைய மெனக்கெட்டிருப்பதும், இதற்காக ஒரு பெரிய குழுவை திட்டமிட்டு அமைத்திருப்பதும் தெரிகிறது. ராமதாஸ் (பல பேருக்கு முனிஸ்காந்த்) காமெடியை முண்டாசுபட்டி, மாநகரம் படத்திற்க்கு பிறகு மிகவும் ரசித்து சிரித்தேன். வடிவேலுக்கு பிறகு வெறும் முகத்தை மட்டுமே பார்த்து சிரிக்க வைக்கிறது இவரின் முகபாவனை. ஆனந்தராஜின் காமெடி கலந்த வில்லனிசம் ( குறிப்பாக பாட்டியிடம் ரேடியோவில் பேசுவது) படத்தில் அதிகம் ரசிக்கப்பட்டவை. அருண் காமராஜ் இப்படியே போனால் தயாரிப்பாளர்கள் கால்சீட்டிற்காக வாசலில் நிற்க்கும் காலம் வெகுதூரமில்லை(நீண்ட நாட்களுக்குப் பிறகு பொனதின்னியை ஞாபக படுத்தியி்ருக்கிறார்).


                   நிக்கி கல்ராணி, பிரியாணிக்கு லெக் பீஸ் எப்படியோ அப்படித்தான் மரகத நாணயத்திற்க்கு இந்த ராணி (அவ்வளவு முக்கியமான பாத்திரம்). பாலில் விழுந்த ஸ்ட்ராபொ்ரி போல ஒரு அழகு இதற்கு மேல் என்ன சொல்ல, முதல் காட்சியில் சாஃப்டாக அறிமுகமாகி அடுத்தடுத்த காட்சிகளில் மெட்ராஸ் பாசையில் எட்டு போட்டு மிரட்டுது அம்மணி. பக்கத்தில் அமர்ந்திருந்த காலேஜ் குருப்பின் சத்தத்தை வைத்து தான் அம்மணிக்கு இவ்வளவு ரசிகர்கள் உண்டு என்பதை உணர்ந்தேன்.

குடும்பத்தோடு சிரிக்கலாம் 100 சதவிதம் சிரிப்பு உத்திரவாதம்.

- பாஸ்கி.

Friday, 9 June 2017

ஒரு கிடாயின் கருணை மனு

                 

                     தமிழ் சினிமா இன்றைக்கு நல்ல கதைகளை தந்து சினிமா தரத்தை உயர்ந்திக் கொண்டு போகிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான் இருந்தும் மத்த மொழி ரசிகர்களிடம் இல்லாத கெட்ட பழக்கம் நம்மி்ல் உண்டு அது என்னவென்றால் ஜே கோஷம் போடுவது. ஒரு வாரமாக வளைதளங்களில் ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்க்கு செலவில்லாமல் மார்கெட்டிங் செய்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குதான் கடவுள் தெரிவாருனு சொல்வதைப் போல இந்த படத்தை பிடிக்காதவர்கள் கண்டிப்பாக சினிமா ரசிகர்களே இல்லை என்ற கருத்தை தோழர்கள் முன் வைக்க எங்கம்மா சத்தியமா நானும் சினிமா ரசிகன்தான்டா என்று படத்தை பார்க்க முடிவு செய்தேன். கண்டிப்பாக இது நல்ல படம்தான் ஆனால் விமர்சனங்களால் சற்று ஏமாற்றம் அடைந்துவிட்டேன். ஆஹா ஓஹோ என்று தலப்பாகட்டி பிரியாணியை எதிர்பார்த்ததாலோ என்னவோ கிடைத்தது சாதாரண பாய் கடை பிரியாணி மட்டுமே(கண்டிப்பா இது காகா பிரியாணி இல்லை).


                   பிரம்மாண்ட பாடல்களும், சண்டைக் காட்சிகள் இல்லாமலும் கிராமத்து கதை இருந்துவிட்டாலே உலக தரமான சினிமா என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டோம். இத்தகைய நெஞ்சங்களுக்கு கொஞ்சம் மிஷ்கின், செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் படங்களும் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன என்பதை நினைவு கூர்கிறேன்(அவ்வளவு வேண்டாம் உதாரணத்திற்க்கு கடந்த மார்ச் மாதம் வந்த மாநகரம் திரைப்படம் கடந்த வருடத்தில் ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை, துருவங்கள் பதினாறு இவையெல்லாம் நிச்சயம் உலக தரமான சினிமா உறியடி கொரியன் படங்களுக்கே சாவலாக அமைந்தது)
ஒரு சாதாரண கிராமத்தில் இருக்கும் நம்ம ஹீரோவிற்க்கு முப்பத்தைந்து வயதில் திருமணமானதால் குலதெய்வத்திற்க்கு நேர்த்திக்கடனாக கிடா வெட்ட கிளம்பும் கும்பல் வழியில் ஒரு பிரச்சனையை கிளப்புவதும் அதிலிருந்து மீண்டு வருவதே கதை. தமிழ் சினிமாவிற்க்கு புதிய கதைகளம் என்றாலும் சில இடங்களில் திரைக்கதை சோர்வை தருகிறது. குறைந்த பட்டெஜ் படங்களுக்கான ஆதர்சன நாயகர்கள் ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே அதில் விஜய் சேதுபதிக்கு பிறகு விதார்த் தான். ரவிணா ரவி எங்கயோ கேட்ட குரல் என்று நெட்டில் துழாவியதில் இவர் தான் இன்றைய தமிழ் சினிமாக்களில் பல ஹீரோயின் குரல்களுக்கு சொந்தக்காரி என க்ளிக்கியது(முக்கியமாக எமிக்கு இவர் தான் ஆஸ்தான டப்பிங் ஆர்டிஸ்ட்). படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும், முடிவில் வரும் காட்சியும் தனிபட்ட முறையில் கவர்ந்தவை. இதுப்போன்ற படங்கள் வரவேற்க்கபட வேண்டும் ஆனால் மிகையான விமர்சனங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துவிடக்கூடாது. மிகுந்த எதிர்பார்ப்பில்லாமல் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாள் இனிய நாளாக அமையும்.


- பாஸ்கி.

Saturday, 3 June 2017

கலைஞர் - வைர(த்திற்கு) விழா

   
           
                  தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்த நாள் இன்று. தன் வாழ்நாளில் 60 வருடங்களை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியமைக்காக தலைவருக்கு வைர விழாவை கோலாகலமாக ஏற்பாடு செய்து வருகிறது கழகம். 60 என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல. இது போராட்டங்களும், வெற்றி தோல்விகளும் நிறைந்த வாழ்க்கை. 1957 முதல் இன்றைக்கும் அவருடைய அரசியல் பணி தொடர்ந்துக் கொண்டுதான் உள்ளது. அரசியல் நோக்கில் எத்தனையோ இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இவரின் இலக்கியத்திற்கோ அடிமைகள் கோடியில் உண்டு. இவர் தமிழுக்கும், தமிழ் இனத்திற்க்கும் ஆற்றிய தொண்டோ மறக்க முடியாதவை. உழல் செய்தோ, ஊரை உலையிலுட்டோ சிறை செல்லவில்லை. ஈழத்திற்க்கும், இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக மட்டுமே சிறையை கண்டதுண்டு. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் ஆனால் கலைஞர் என்றும் எங்கள் தலைவரே. தமிழகம் நிறைய வளர்ச்சியையும், நிறைய திட்டங்களையும் இவரால் கண்டதுண்டு. இட ஒதுக்கீடும், பெண்களின் சொத்துரிமை எல்லாம் இன்றும் பேசப்படுபவை. வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, பயன் பெற்றவன் ஏசுவதே இந்த மண்ணின் நாகரிகமானது அதுவே தலைவரின் வெற்றிபடியாய் போனது. 80 வயது வரை சுறுசுறுப்பு, நினைவாற்றல், ஓயா உழைப்பு இத்தனையும் ஒன்றாய் அமைந்து இந்த தலைவருக்கு மட்டுமே. தமிழகத்தில் மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுத்ததில் கலைஞருக்கு நிகரும் யாருமில்லை இவர் தலைமைக்கு நிகரும் ஏதுமில்லை.


                        அரசியல் கலந்த படைப்பாளியாய் இவருக்கு நிகர் இவரே இதுவரையும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை. ஆயிரம் நிறைகளும், குறைகளும் சொல்லப்பட்டாலும் அதற்கெல்லாம் அப்பாற்பட்ட அசைக்கமுடியா அரசியலின் கலங்கமில்லா தூண் இந்த தலைவர். அரசியல் படித்தவனெல்லாம் அரசியல் செய்யமுடியும் ஆனால் அரசியலை வெல்லமுடியாது. இவரோ அரசியலை படித்தவர் இல்லை அதன் சூழ்ச்சியை படித்தவர் இதுதான் தொன்னூறு வயதிலும் தலைவன் என்ற இடத்தை தக்க வைத்துள்ளது. அரசியல் ஒருபுறம் உயர்த்த மறுபுறமோ தமிழால் உயர்ததப்பட்டார். இடம், பொருள், ஏவல் இதை முழுமையாக பின்பற்றும் ஓரே தலைவன், குறிப்பாக அதிகமாக பேசப்பட்டவையே ஆனாலும் மறக்க முடியாத சம்பவம் பிரபல அரசு கல்லூரி ஒன்றில் விருந்தினராக அழைப்பு விடுக்க தேர்தல் நேரம் என்பதால் கண்டிப்பாக அரசியல் பேசக்கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர் இதற்கு எந்த எதி்ர்ப்பும் இல்லாமல் கலந்துக் கொண்டு பேச்சை முடிக்கும் தறுவாயில் அனைவருக்கும் உணவுண்டு, சாப்பிட்டு முடித்ததும் மறக்காமல் இலையை தூக்கியெறிந்து விட்டு கையை கழுவி விடுங்கள் என்று சொல்ல சத்தம் காதை கிழித்ததாம். இத்தகைய எல்லா திறமை மிக்க தலைவன் எண்ணிக்கையில் மிகக் குறைவே.


                         உழல் குற்றவாளிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நாட்டில், குற்றமற்ற மனிதரை தூக்கி கொண்டாடுவதில் தவறேதும் இல்லையே. இந்த தலைவனால் சூரியனின் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டே தான் போகுமே தவிற குறைய போவதில்லை. இத்தகைய சூரியனிடமிருந்து பிறிந்த கோள்கள் தான் மற்றவை. வடமாநிலத்திலும், சொந்த மாநிலத்திலும் தன்னையும் கட்சியையும் அழிக்க நினைத்த எதிரிகளை மண்ணோடு மண்ணாக்கிய பெருமை இந்த தலைவனை மட்டுமே சாரும். எது எப்படியோ திமுகவிற்கு இவர் "ஆயிரம் பொன்" என்பதை மறுக்க முடியாத உண்மை.

வாழ்க மு.க வளர்க தி.மு.க