
தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்த நாள் இன்று. தன் வாழ்நாளில் 60 வருடங்களை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியமைக்காக தலைவருக்கு வைர விழாவை கோலாகலமாக ஏற்பாடு செய்து வருகிறது கழகம். 60 என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல. இது போராட்டங்களும், வெற்றி தோல்விகளும் நிறைந்த வாழ்க்கை. 1957 முதல் இன்றைக்கும் அவருடைய அரசியல் பணி தொடர்ந்துக் கொண்டுதான் உள்ளது. அரசியல் நோக்கில் எத்தனையோ இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இவரின் இலக்கியத்திற்கோ அடிமைகள் கோடியில் உண்டு. இவர் தமிழுக்கும், தமிழ் இனத்திற்க்கும் ஆற்றிய தொண்டோ மறக்க முடியாதவை. உழல் செய்தோ, ஊரை உலையிலுட்டோ சிறை செல்லவில்லை. ஈழத்திற்க்கும், இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக மட்டுமே சிறையை கண்டதுண்டு. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் ஆனால் கலைஞர் என்றும் எங்கள் தலைவரே. தமிழகம் நிறைய வளர்ச்சியையும், நிறைய திட்டங்களையும் இவரால் கண்டதுண்டு. இட ஒதுக்கீடும், பெண்களின் சொத்துரிமை எல்லாம் இன்றும் பேசப்படுபவை. வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, பயன் பெற்றவன் ஏசுவதே இந்த மண்ணின் நாகரிகமானது அதுவே தலைவரின் வெற்றிபடியாய் போனது. 80 வயது வரை சுறுசுறுப்பு, நினைவாற்றல், ஓயா உழைப்பு இத்தனையும் ஒன்றாய் அமைந்து இந்த தலைவருக்கு மட்டுமே. தமிழகத்தில் மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுத்ததில் கலைஞருக்கு நிகரும் யாருமில்லை இவர் தலைமைக்கு நிகரும் ஏதுமில்லை.

அரசியல் கலந்த படைப்பாளியாய் இவருக்கு நிகர் இவரே இதுவரையும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை. ஆயிரம் நிறைகளும், குறைகளும் சொல்லப்பட்டாலும் அதற்கெல்லாம் அப்பாற்பட்ட அசைக்கமுடியா அரசியலின் கலங்கமில்லா தூண் இந்த தலைவர். அரசியல் படித்தவனெல்லாம் அரசியல் செய்யமுடியும் ஆனால் அரசியலை வெல்லமுடியாது. இவரோ அரசியலை படித்தவர் இல்லை அதன் சூழ்ச்சியை படித்தவர் இதுதான் தொன்னூறு வயதிலும் தலைவன் என்ற இடத்தை தக்க வைத்துள்ளது. அரசியல் ஒருபுறம் உயர்த்த மறுபுறமோ தமிழால் உயர்ததப்பட்டார். இடம், பொருள், ஏவல் இதை முழுமையாக பின்பற்றும் ஓரே தலைவன், குறிப்பாக அதிகமாக பேசப்பட்டவையே ஆனாலும் மறக்க முடியாத சம்பவம் பிரபல அரசு கல்லூரி ஒன்றில் விருந்தினராக அழைப்பு விடுக்க தேர்தல் நேரம் என்பதால் கண்டிப்பாக அரசியல் பேசக்கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர் இதற்கு எந்த எதி்ர்ப்பும் இல்லாமல் கலந்துக் கொண்டு பேச்சை முடிக்கும் தறுவாயில் அனைவருக்கும் உணவுண்டு, சாப்பிட்டு முடித்ததும் மறக்காமல் இலையை தூக்கியெறிந்து விட்டு கையை கழுவி விடுங்கள் என்று சொல்ல சத்தம் காதை கிழித்ததாம். இத்தகைய எல்லா திறமை மிக்க தலைவன் எண்ணிக்கையில் மிகக் குறைவே.

உழல் குற்றவாளிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நாட்டில், குற்றமற்ற மனிதரை தூக்கி கொண்டாடுவதில் தவறேதும் இல்லையே. இந்த தலைவனால் சூரியனின் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டே தான் போகுமே தவிற குறைய போவதில்லை. இத்தகைய சூரியனிடமிருந்து பிறிந்த கோள்கள் தான் மற்றவை. வடமாநிலத்திலும், சொந்த மாநிலத்திலும் தன்னையும் கட்சியையும் அழிக்க நினைத்த எதிரிகளை மண்ணோடு மண்ணாக்கிய பெருமை இந்த தலைவனை மட்டுமே சாரும். எது எப்படியோ திமுகவிற்கு இவர் "ஆயிரம் பொன்" என்பதை மறுக்க முடியாத உண்மை.
வாழ்க மு.க வளர்க தி.மு.க