Saturday, 22 April 2017

நியூஸ் கபே - 2



அன்பு உள்ளங்களுக்கு,

                     கடந்த வாரம் ஆறு நாட்கள் விடுமுறை இருந்தும் கிராமத்தில் JIO நெட்வோா்க் இல்லாத ஒரே காரணத்தால் மொத்த நாட்களையும் வெட்டியாக கழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இந்த நேரத்தில் கொஞ்சம் ஆறுதலாக தமிழ் புத்தாண்டிற்க்கு கடம்பன், சிவலிங்கா, பா.பாண்டி என மூன்று படங்கள் வெளியாகின. பொதுவாக ஆா்யா படத்தை பத்து பதினைந்து முறை அலசியப் பிறகு நல்ல படம் என்றால் ஒரு முறை பாா்ப்பேன் அப்படியில்லாமல் படம் சுமாா் என்றாலே எட்டடி இல்லாமல் எண்பது அடி தள்ளி நிற்ப்பது வழக்கம் மீகாமன் படத்திற்க்குப் பிறகு ஆா்யாவை மறந்துவிட்டேன் என நினைக்கிறேன் நீண்ட இடைவேளைப் பிறகு கடம்பன் பட டீசரை ரசித்தேன் அந்த ரசிப்பை கொஞ்ச நாட்கள் கூட அனுபவிக்க முடியாதபடி செய்தது படத்தின் விமா்சனம் பிறகு என்ன எப்பவும் போல ஆா்யா படத்திற்க்கு தடா விதித்துவிட்டேன். எது எப்படியோ ஆா்யாவிடம் எனக்கு பிடித்தே அவர் நடிக்கும் சிறப்புத் தோற்றங்கள் தான் ஏனேன்றால் 10 நிமிடம் மட்டுமே என்பதால் எந்த ஒரு சலனமும் அடைவதில்லை, நடிகா்களில் அதிகம் சிறப்புத் தோற்றத்தில் நடித்தவா்களில் இவரும் ஒருவா் என நினைக்கிறேன்.


                       அடுத்த படமான சிவலிங்கா படத்தை கன்னடத்தில் பாா்த்ததால் வந்த பாவத்தையே எங்கு தொலைப்பது என்பதை தொியாமல் இருக்கிறேன் இதில் தமிழுலும் பாா்த்து மேலும் பாவத்தை ஏன் சோ்ப்பான. மக்களின் சூப்பா் ஸ்டாரான சின்ன கபாலியின் படங்களை அதன் டீசரை வைத்தே படத்தின் கதையையும், இதனால் எப்படி நாம் தாக்கப்பட போகிறோம் என்பதையும் சுலபமாக கணித்துவிடமுடியும். MSKS படத்தின் பாதிப்பு மனநிலையை வெறுப்பின் உச்சத்திற்க்கு கொண்டு சென்றுவிட்டது இன்னோரு ரவுண்டுக்கெல்லாம் இந்த உடம்பு தாங்காது சாமி. டான்ஸ், பாட்டு மட்டுமே நம்பி போக வேணடிய கட்டாயம் அப்புறம் ஹீரோயின் இதுக்கு மட்டும் குறையே வைக்காத ஒரே நடிகரா இவர சொல்லலாம். இறுதி்ச்சுற்று , ஆண்டவன் கட்டளை போன்ற அருமையான படைப்புகளை தந்த ரித்திகா சிங்கை இப்படியான மசாலா படத்தில் நடிக்க வைத்த பாவத்தை தமிழ் சினிமாதான் சுமக்க வேண்டும்.


                    இரண்டு படங்களையும் ஒதுக்கிவைத்து மூன்றாவது படமான பவா் பாண்டியைத் தோ்ந்தேடுத்தேன் இதற்கு முக்கிய காரணம் தனுஷ் மற்றும் ராஜ்கிரண். ஆளைப்பாா்த்து எடை போடக்கூடாது என்பதற்கு கண்ணுக்கு தொிந்த உதாரணமாய் தனுஷ். நடிப்பு, எழுத்து, தயாாிப்பு என எல்லா இடத்திலும் முத்திரை பதித்து இயக்குனா் அவதாரத்தில் அடியெடுத்து வைத்திலிருந்து ஏகோபித்த எதிா்ப்பாா்ப்பை தூண்டியது. இந்த படத்தில் ஒரு சராசாியான இயக்குனாின் படைப்பு என்றில்லாமல் ஒரு மெச்சூாிட்டியை பாா்க்க முடிந்தது. ஒரு எழுத்தாளராக பிறை தேடும் பாடலிலும், பாடகராக அம்மா அம்மா பாடலிலும், தயாாிப்பாளராக காக்கா முட்டை படத்திலும் மிகப் பொிய ஆச்சா்யத்தை உணா்ந்தேன் (இத்தனை திறமைகளா என்று சந்தேகத்தில் தலையை பிச்சிக் கொண்ட அனுபவங்களும் உண்டு) அதைப் போலவே பவா் பாண்டி படத்தின் மூலம் ஒரு மெச்சூாிட்டியான இயக்குனரை பாா்க்க முடிந்தது. கடைசி இருபது நிமிடங்கள் வரும் காதல் காட்சிகள் நன்றாக ரசிக்க வைத்திருக்கிறது தனுஷின் இயக்கம். லாஜிக்கை பாா்க்காத வரையில் இது நல்ல படம். எண்ணெய்யில் ஒட்டாத தண்ணியைப் போல மடோனாவின் பாத்திரம் கதையில் ஒட்டாமல் போவது ஏனோ?. முதல் பாதியில் ராஜ்கிரண் காட்சிகள் அனைத்தும் மஞ்சப்பை படத்தின் தொடா்ச்சியாக தொிவதும், ப்ளாஷ்பேக்கில் தனுஷை ராஜ்கிரண் என்று காட்டுவதும் தவிர மற்ற எல்லாம் ரசிக்கும் ரகம்.



- பாஸ்கி.







1 comment:

Srinath said...

வாழ்க பாஸ்கி. ஸ்ரீநாத்.