Wednesday, 15 March 2017

இரோம் கனவும் மக்களின் துரோகமும்


இரோம் ஷர்மிளா, யாா் இந்த பெண்மணி?.
2000ம் ஆண்டு நவம்பா் 2ம் தேதி அன்று மணிப்பூாில் இம்பால் பள்ளத்தாக்கில் மலோம் என்னும் ஊாில் Armed forces (special powers) Act எனும் ஆயதப்படையால் 10 போ் சுடப்பட்டனா். இந்த Armed forces (special powers) Act சந்தேகமுள்ள ஆட்கள் யாராக இருந்தாலும் எந்தவொரு விசாரனையுமின்றி சுடவும், போராளிகளை காலவரையின்றி காவலில் வைப்பதற்க்கும் அதிகாரமுள்ளது. 

இந்த வன்முறையை எதிா்த்தும், இந்திய ஆயுதப்படை சட்டம் மீளப் பெற வேண்டியும் நவம்பா் 4 ல் தன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடா்ந்தவர் இவா் தான். இந்த போராட்டம் ஒரு நாட்களோ இரண்டு நாட்களோ இல்லை,  16 ஆண்டுகள் தொடரப்பட்டது. போராட்டம் தொடங்கிய மூன்றாம் நாளில் இவா் தற்கொலைக்கு முயன்றதாய் கூறி காவல் துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டாா். மேலும் இவாின் உடல்நிலை உணவில்லாமல் மோசமானதால் மூக்கு குழாய் வழியாக உணவு வழங்கப்பட்டது. தற்கொலையால் கைது செய்யப்பட்டவருக்கு ஓராண்டு சிறைதண்டனை மட்டுமே வழங்க சட்டமிருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்து மீண்டும் கைதுச் செய்யயப்பட்டாா் ஷர்மிளா. ஆகஸ்ட் 9ம் தேதி தனது 16 ஆண்டுக்கால போராட்டத்தை முடித்துக்கொண்ட ஷர்மிளா போராட்டத்தால் சாதிக்க முடியாததை அரசியலில் இருந்து சாதிக்கவும், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் 1958ஐ எதிா்க்கவும் 2016 அக்டோபர்-ல் புதியக் கட்சி தொடங்கினாா். 2017-ல் நடந்த பொதுத் தேர்தலில் மணிப்பூா் முதல்வரான ஒக்ரோம் இபோபி சிங்கை எதிா்த்து போட்டியிட்ட ஷா்மிளா வாங்கிய மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கையோ வெறும் 90 ஓட்டுக்கள் மட்டுமே. 
மக்களுக்காக போராடிய ஓரு பெண்மணி அதே மக்களால் தோற்கடிக்கப்பட்டதும், அவாின்  அரசியல் கனவை சிதைத்தும் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் கவலையில் ஆழ்த்தியது. நல்லதெது கெட்டதெது என்பதை தெரிந்தும் தமக்காக பாடுப்பட்ட ஒருவரை இப்படி தூக்கி எறியப்பட்டது ஒரு கேள்விக்குறியான ஓன்றே. நாட்டைக் கொள்ளை அடிப்பவனை பதவியில் அமா்த்துவதாலும், சமுகத்திற்காக போராடியவரை தூக்கியேறியப்படுவதாலும்  நாம் நம் எதிா்காலத்தை சீா் குலைத்து கொண்டிருக்கின்றோம் என்பதை யாரும் உணா்வதில்லை இனி உணரப்போவதும் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் விளம்பரம் இல்லாமல் ஒரு குண்டூசியை கூட விற்கமுடிவது இல்லை. எல்லாவற்றிற்க்கும் விளம்பரம் தேடும் இங்கு இரோம் ஷா்மிளா தன்னை விளம்பரப்படுத்தி இருந்தால் கொஞ்சம் வெற்றி வாய்ப்பு இருந்திருக்குமோ என்னவோ. நல்ல போராளியை ஏற்க மறுக்கும் நாம் பின்பு தலைவா்களை குறைக்கூறுவது எந்த வகையில் நியாயம். உண்மை போராளிகளை ஒதுக்கி வைப்பதால் நமக்கு கிடைக்கப் போகும் நன்மைதான் என்னவோ, ஒட்டிறக்கு பணம் வாங்கிக் கொண்டு தகுதியற்ற தலைவா்களை தோ்ந்தேடுத்து நம் நாட்டை சீரழித்து கொண்டிருக்கின்றோம். 

இப்படிப்பட்ட மாபெரும் மனிதா்களின் கஷ்டத்திலும், கனவிலும் மண்ணைப் போடுவதால் இனி சமுகத்திற்காக குரல் கொடுப்பவா்களும் தயங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.




- பாஸ்கி.





3 comments:

Unknown said...

empowering women

Unknown said...

உலகலளாவிய பண்பாடும் அது தான் பாஸ்கி ..!! ஓட்டு போட்ட பின்பு வருத்தப்படுவது..!! மக்களுக்கு சேவை செய்பவன். ம(மா)க்களால் ஏசப்படுவது அறியாமையும் நியதி..!! இதில் சர்மிலா ஒன்றும் விதி விலக்கல்ல..!

பாஸ்கி said...

நிசத்திரமான உண்மை Saravanan