Thursday, 23 March 2017

மாநகரம் எனும் பொக்கிஷம்


அன்பு உள்ளங்களுக்கு,
                
                தமிழகத்தில் எத்தனையோ சம்பவங்கள் நம் எல்லோரையும் பரபரப்பாக வைத்திருக்கையில், கடந்த ஒருவாரமாக திரும்பியப் பக்கமெல்லாம் மாநகரம் திரைப்படத்தின் விமா்சனம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு என்பது அப்படத்தின் விளம்பரமும், விமா்சனமும் மட்டுமே. இதில் படத்தின் விளம்பரம் என்னதான் பிரம்மாண்டமாக இருந்தாலும் படத்தின் விமா்சனம் நெகட்டிவ் என்றால் நாமம் தான் மிஞ்சும் அதுப்போல விமா்சனம் பாஸிடிவ் ஆனாலும் விளம்பரம் இல்லை என்றாலும் அதோ கதிதான். எல்லோரையும் போல நானும் விமா்சனத்தை வைத்து நல்ல படமா இல்லை சுமாா் ரகமா என முடிவெடுத்த பிறகே ரிஸ்க் எடுக்க தயாராகுவேன். அப்படித்தான் மாநகரம் படத்தின் பல அலசலுக்கு பிறகு படத்தை பாா்த்தே தீர வேண்டும் என எனக்குள் இருந்த பூனை என்னை உசுப்பேற்றியது.

             
              படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை Left, Right, Back னு எந்த பக்கமும் திரும்ப விடாமல் செய்துவிட்டது படத்தின் திரைக்கதை. நடிகா் தோ்வும் அவா்களின் நடிப்பும் படத்திற்கு மிகப்பொிய ப்ளஸ். இரண்டு, மூன்று இழைகளை ஒரே புள்ளியில் சோ்க்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எத்தனையோ இருந்தாலும் மாநகரம் ஒரு புதுமையான திரைக்கதையை தந்திருக்கிறது. இப்படியான கதைகளத்தைக் கொண்ட படங்களில் சில படங்கள் மட்டுமே வெற்றியை சந்தித்திருக்கையில் இதில் மாநகரம் தனி முத்திரை பதித்திருக்கிறது.  தமிழ் சினிமாவில் பொதுவாக ஒரு நடிகா் இல்லை இயக்குனாின் படத்தை பாா்க்கும் பொழுது படத்தின் சில காட்சிகள் அந்த நடிகனின் முந்தைய படங்களின் தாக்கத்தை அளிக்கும். இத்தகைய சுழலில் ரசிகனின் மனநிலையோ இது அதுல என்றுதான் யோசிக்கத்தோன்றும். அப்படி எந்த ஒரு மனநிலையையும் இந்த மாநகரம் தரவில்லை. படத்தின் சில காட்சிகள் (ஸ்ரீ எங்கடா என் பேக் என்று கேட்கும் காட்சியிலும், மதுசூதனன் துப்பாக்கியை சந்திப் கிஷணிடம் காட்டும் நேரத்தில் சிறுவன் தலையசைக்கும் காட்சியிலும்) மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாதாரணமாக ஆக்சன், மசாலாக்களின் மோகத்தில் இருக்கும் நமக்கு ஒரு விசித்திரமான கதைகளத்தை தந்திருக்கிறது இந்த மாநகரம். கடினமான கதையை சாதாரணமாக கொடுப்பதிலும், சாதாரணக் கதையை ஸ்பெலாக கொடுப்பதிலும் அந்த திரைக்கதையின் யுக்தியைப் பொறுத்தே படத்தின் வெற்றி உள்ளது. நானும் நல்ல படத்தை தருகிறேன் என்னும் இயக்குனா்களை இந்த படத்தை பாா்க்க வைக்கலாம் அப்படியாவது திருந்த வாய்ப்பிருக்கிறது. அவ்வப்பொழுது மட்டுமே இதுப்போன்ற படங்கள் தமிழ் சினிமாவை காப்பாற்றுகின்றன.


                 உறியடி, துருவங்கள் பதினாறு படத்திற்குப் பிறகு என்னை வெகுவாக கவா்ந்தது இந்த மாநகரம். கதைக்காக தேவையில்லாமல் கதாபாத்திரத்தை போட்டு தள்ளும் அட்டு காட்சிகள் இதில் இல்லை என்பதில் சின்ன சந்தோஷம், க்ளைமேக்ஸில் யாருக்கும் எந்த தண்டனை இல்லை என்றாலும் ஏதோ நம்மை ஒரு கஷ்டமான மனநிலையில் தான் திரையை விட்டு விலகச்செய்கிறது இந்த மாநகரம்.

- பாஸ்கி.

No comments: