பெண்கள் வெறும் சதையோ? :
கல்லாய் இருக்கையில் சிலைவடித்தும்,
பாலபிஷேகம் செய்யும் இனமோ
நிஜத்தில் மட்டும் சிதைப்பது ஏனோ ?
கற்பனையில் மயிலே என்றும் மானே என்றும் வா்ணிக்கும் இனமோ
நிஜத்தில் மட்டும் வதைப்பது ஏனோ?
பெண்களெல்லாம் காக்கும் கடவுளாய்
பூஜிக்கும் இனமோ
அக்கடவுளின் மானத்தை அழித்து பாவங்கள் சோ்ப்பது ஏனோ?
இத்தனை இழிவை தருவது ஏனோ?
பெண்கள் வெறும் சதை தானோ.....?
அவதாரம்:
தாய் தந்தைக்கு ஒரு நல்ல மகளாய்
உடன்பிறப்பிற்கு நல்ல சகோதரியாய்
நண்பனுக்கு ஒரு நல்ல தோழியாய்
கணவனுக்கு நல்ல மனைவியாய்
குழந்தைக்கு நல்ல அம்மாவாய்
தன் வாழ்க்கையில் இத்தனை அவதாரமாய் வாழும் இந்த பெண்மையைப் போற்றுவோம்.
- இனிய மகளிா் தின வாழ்த்துக்கள்.
1 comment:
Empowering nation by empowering women
happy women's day
Post a Comment