Friday, 9 June 2017

ஒரு கிடாயின் கருணை மனு

                 

                     தமிழ் சினிமா இன்றைக்கு நல்ல கதைகளை தந்து சினிமா தரத்தை உயர்ந்திக் கொண்டு போகிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான் இருந்தும் மத்த மொழி ரசிகர்களிடம் இல்லாத கெட்ட பழக்கம் நம்மி்ல் உண்டு அது என்னவென்றால் ஜே கோஷம் போடுவது. ஒரு வாரமாக வளைதளங்களில் ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்க்கு செலவில்லாமல் மார்கெட்டிங் செய்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குதான் கடவுள் தெரிவாருனு சொல்வதைப் போல இந்த படத்தை பிடிக்காதவர்கள் கண்டிப்பாக சினிமா ரசிகர்களே இல்லை என்ற கருத்தை தோழர்கள் முன் வைக்க எங்கம்மா சத்தியமா நானும் சினிமா ரசிகன்தான்டா என்று படத்தை பார்க்க முடிவு செய்தேன். கண்டிப்பாக இது நல்ல படம்தான் ஆனால் விமர்சனங்களால் சற்று ஏமாற்றம் அடைந்துவிட்டேன். ஆஹா ஓஹோ என்று தலப்பாகட்டி பிரியாணியை எதிர்பார்த்ததாலோ என்னவோ கிடைத்தது சாதாரண பாய் கடை பிரியாணி மட்டுமே(கண்டிப்பா இது காகா பிரியாணி இல்லை).


                   பிரம்மாண்ட பாடல்களும், சண்டைக் காட்சிகள் இல்லாமலும் கிராமத்து கதை இருந்துவிட்டாலே உலக தரமான சினிமா என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டோம். இத்தகைய நெஞ்சங்களுக்கு கொஞ்சம் மிஷ்கின், செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் படங்களும் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன என்பதை நினைவு கூர்கிறேன்(அவ்வளவு வேண்டாம் உதாரணத்திற்க்கு கடந்த மார்ச் மாதம் வந்த மாநகரம் திரைப்படம் கடந்த வருடத்தில் ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை, துருவங்கள் பதினாறு இவையெல்லாம் நிச்சயம் உலக தரமான சினிமா உறியடி கொரியன் படங்களுக்கே சாவலாக அமைந்தது)
ஒரு சாதாரண கிராமத்தில் இருக்கும் நம்ம ஹீரோவிற்க்கு முப்பத்தைந்து வயதில் திருமணமானதால் குலதெய்வத்திற்க்கு நேர்த்திக்கடனாக கிடா வெட்ட கிளம்பும் கும்பல் வழியில் ஒரு பிரச்சனையை கிளப்புவதும் அதிலிருந்து மீண்டு வருவதே கதை. தமிழ் சினிமாவிற்க்கு புதிய கதைகளம் என்றாலும் சில இடங்களில் திரைக்கதை சோர்வை தருகிறது. குறைந்த பட்டெஜ் படங்களுக்கான ஆதர்சன நாயகர்கள் ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே அதில் விஜய் சேதுபதிக்கு பிறகு விதார்த் தான். ரவிணா ரவி எங்கயோ கேட்ட குரல் என்று நெட்டில் துழாவியதில் இவர் தான் இன்றைய தமிழ் சினிமாக்களில் பல ஹீரோயின் குரல்களுக்கு சொந்தக்காரி என க்ளிக்கியது(முக்கியமாக எமிக்கு இவர் தான் ஆஸ்தான டப்பிங் ஆர்டிஸ்ட்). படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும், முடிவில் வரும் காட்சியும் தனிபட்ட முறையில் கவர்ந்தவை. இதுப்போன்ற படங்கள் வரவேற்க்கபட வேண்டும் ஆனால் மிகையான விமர்சனங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துவிடக்கூடாது. மிகுந்த எதிர்பார்ப்பில்லாமல் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாள் இனிய நாளாக அமையும்.


- பாஸ்கி.

No comments: